Sunday, April 6, 2008

மழலையர் பாடல்கள் தொகுப்பு-9


ஒன்னு ரெண்டு மூனு நாலு
எண்ணிச் சொல்லு குட்டித் தம்பி
கையைக் காலை தூக்கி நானும்
செய்திடுவேன் உடற்பயிற்சி
சோம்பித் திரிந்த காலம் போச்சி
சுறுசுறுப்பு கூடிப் போச்சி


பொறியில் வைத்த வடை வேண்டாம்
ஊசிப் போயி நாளாச்சு
தட்டில் வைத்துத் தாருங்கள்
சமர்த்தாய் நானும் தின்றிடுவேன்

கொட்டும் மழையும் ஓய்ந்ததே
கோடை வெயில் தகிக்குதே
சுற்றிச் சுழலும் மின்விசிறி
சுகமாய்க் காற்றைத் தருகிறதே



அரச மரமும் அலுத்துப் போச்சு
தெருக்கோடியும் திகட்டிப் போச்சு
கம்ப்யூட்டர் காலமாச்சு
கணபதிக்கும் தேவையாச்சு
வலையுலகம் வந்துட்டாரு
பதிவெழுத தொடங்கிட்டாரு

3 comments:

Anonymous said...

;(

Anonymous said...

நல்லா இருக்கு பாட்டுக் கள

ச்சின்னப் பையன் said...

:-)))

Post a Comment

Template by:

Free Blog Templates