Tuesday, March 25, 2008

மழலையர் பாடல்கள் தொகுப்பு-7


கண்ணே மணியே...படிக்க வா....

கண்ணே மணியே ஓடிவா
கட்டிக் கரும்பே படிக்க வா

அழகாய் நீயும் பேசிட
அன்னை தமிழை படிக்க வா

அவசியமான தேவைக்கு
ஆங்கிலம் பாடம் படிக்க வா

கணக்காய் வாழ்த் தெரிந்து கொள்ள
கணக்குப் பாடம் படிக்க வா

சான்றோர் பெருமை அறிந்து கொள்ள
சரித்திர பாடம் படிக்க வா

பூமிப் பந்தை புரிந்து கொள்ள
பூகோள பாடம் படிக்க வா

அதிசயம் பலவும் அறிந்து கொள்ள
அறிவியல் பாடம் படிக்க வா

கலைகள் பலவும் கற்றிடவே
கணிணி பாடம் படிக்க வா

கண்ணே மணியே ஓடிவா
கட்டிக் கரும்பே படிக்க வா>>>>கண்மணி

மானாட...மயிலாட

...

கொய்யா மரக் கிளையிலே
குக்கூ பாடுது குயில் கூட்டம்

மாமரத்துக் கிளையிலே
கொஞ்சிப் பேசுது கிளிக் கூட்டம்

பச்சை பசும் புல்வெளியில்
துள்ளியோடுது மான் கூட்டம்

பூத்துக் குலுங்கும் தோட்டத்தில்
தோகைமயிலின் ஒயிலாட்டம்

அரங்கேற்றமாகுது ஆட்டம் பாட்டம்
அனுமதி இங்கே இலவசம்>>>>கண்மணி

6 comments:

  1. டீச்சர் ராகத்தோடு பாட இனிமையா இருக்கு பாட பாடல்கள் எல்லாம்

    ReplyDelete
  2. இரண்டும் அழகான பாடல்கள்.
    நல்லா இருக்கு.

    ReplyDelete

netoops blog