Monday, July 23, 2007

குட்டீஸுக்கு ஒரு புதிர்

கீழே உள்ள வாத்தைகளில் எது எதனுடன் பொருந்தும் என்று கண்டு பிடிங்க.

choose the right 'son' word to match with the following phrases.

season...venison...treason....prison..mason....
crimson....parson...reason....bison...lesson



1.jail

2.a clergyman

3.flesh of deer

4.a colour

5.cause

6.a teacher takes this

7.summer is one

8.a wild buffalo

9.treachery

10.kind of labour

Tuesday, July 10, 2007

பேசும் மாய விளக்கு

ஒரு ஊர்ல ஒரு வயசான பாட்டி தனியா வசித்து வந்தாங்க.

அந்த ஊர்ல கொஞ்ச நாளா திருடங்க நடமாட்டம் அதிகமிருந்தது.

ஒரு நாள் பாட்டி வெளியே போய்விட்டு வந்து பார்த்த போது வீட்டுக் கதவு திறந்திருந்தது.

உள்ளே போன பாட்டிக்கு வீட்டுக்குள் ஒரு திருடன் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்து இருப்பது தெரிந்து விட்டது.

அவனை எப்படியும் தப்பிக்க விடாமல் புத்திசாலித் தனமாக பிடிக்கனும்னு நெனச்ச பாட்டி உடனே ஒரு தந்திரம் செய்தாள்.

அங்கிருந்த விளக்கு ஸ்டேண்டின் முன் நின்று கொண்டு ,'மாய விளக்கே என் மீது கோபமா?நான் வெளியே போய் வந்ததும் என்ன நடந்தது என்று கேட்பாயே இன்று ஏன் கேட்கவில்லை' என்றாள்.

இதைக் கேட்டதும் திருடனுக்கு ஆச்சரியம்.பேசும் விளக்கா என்று எட்டிப் பார்த்தான்.

விளக்கு திரைச்சீலையின் அசைவில் லேசாக ஆட பாட்டி,' கோபமில்லையா?அப்படியானால் என்ன நடந்தது சொல்கிறேன் கேள்.பக்கத்து வீட்டு ஜூலி இன்று கடைத் தெருவுக்குப் போகும் போது ஒரு நாய் அவளைத் துரத்தியது.அவள் சத்தம் போட்டுக் கத்தினாள்.''

மீண்டும் விளக்கு காற்றில் அசைய ,'ஓ எப்படிக் கத்தினாள் என்று கேட்கிறாயா' என பாட்டி கேட்டாள்.

திருடனுக்கோ ஒன்றும் புரியவில்லை.நமக்கு மட்டும் ஒன்னும் கேட்கலை.விளக்கு ஆடுவது தெரியுது.ஆனால் கிழவி பேசுகிறாளே என்று குழம்பினான்.

''மாய விளக்கே ஜூலி எப்படிக் கத்தினாள் என்று சொல்கிறேன்'' என்றபடி பாட்டி 'ஹெல்ப் ஹெல்ப் என்று உரக்கக் கத்த அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் பாட்டிக்கு ஏதோ ஆபத்து என்று ஓடி வந்தவர்கள் திருடனைப் பிடித்து போலிஸில் ஒப்படைத்தனர்.

பாட்டியிடம் உங்களுக்கு துணைக்கு ஆள் வேண்டுமா என்று கேட்டபோது,'வேண்டாம் எனக்குத்தான் மாய விளக்குத் துணை இருக்கே 'என்று சிரித்தாள்.

பாட்டியின் சமோயோசித புத்தியைப் பாராட்டிச் சென்றனர்.

நீதி:ஆபத்துக் காலத்தில் சிந்தித்து செயல் பட்டால் அதிலிருந்து நல்லபடியாக நம்மைக் காத்துக் கொள்ளலாம்

Sunday, July 8, 2007

மெத்தப் படிப்பும்....உருகிய வெண்ணையும்...

ஒரு ஊர்ல அண்ணன் தம்பி ரெண்டு பேர்.

அண்ணனுக்கு படிப்பு வரலை.அதனால அவன் ஆடு மாடுகளை வயலுக்கு அழைத்துச் சென்று மேய்க்கத் தொடங்கினான்.

தம்பி கெட்டிக்காரன்.அவன் பள்ளிக்கூடம் சென்று படித்து வந்தான்.வகுப்பிலும் அவன் தான் முதலிடம்.

அவர்களுடைய அம்மா பெரிய மகன் அலைந்து திரிந்து மாடுகளை மேய்க்கிறான் என்பதற்காக அவனுக்கு நல்ல சாப்பாடு,முட்டை, பால் எல்லாம் கொடுப்பார்.

தம்பி பாடம்தானே படிக்கிறான் அவனுக்கு அதிக உழைப்பு இல்லை என்பதால் அண்ணனுக்குக் கொடுப்பதை விட குறைவாகவே கொடுப்பார்.

ஒரு நாள் அவங்க வீட்டுக்கு ஒரு உறவுக்கார பாட்டி வந்தாங்க.

அம்மா செய்வதைப் பார்த்து ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்க அம்மா கடினமான உழைப்பு மாடு மேய்ப்பவனுக்குத்தானே படிப்பவனுக்கு அவ்வளவு சக்தி விரையமாகாது என்றாள்.

பாட்டி சொன்னாங்க பெரியவன் மாடுகளை வயலில் அவிழ்த்து விட்டு விட்டு நன்றாக மரத்தடியில் படுத்துத் தூங்குகிறான்.
அவனுக்கு எந்த கவலையும் இல்லை.

ஆனால் படிப்பவனுக்குத்தான் அதிக உழைப்பு தேவைப்படும்.பாடங்களைப் படிக்கவும்,எழுதவும் ,மனனம் செய்யவும் ,பரீட்சைக்குத் தயாராகவும் என இவனுக்கு வேலை இருந்து கொண்டேயிருக்கும்.
மேலும் பள்ளியில் பல போட்டிகளில் கலந்து கொள்ளவும் செய்கிறான்.
இப்படி படிக்க விளையாட என அதிக சக்தி தேவைப் படும். படிப்பது என்பது சுலபமல்ல என்று கூறினாள்.

இதைச் சோதித்துப் பார்க்க அம்மாவுக்கு ஒரு உபாயமும் சொன்னாள்.

இரவு தூங்கும் போது இருவரின் தொண்டைக்குழியிலும் ஒரு உருண்டை வெண்ணையை வைக்கச் சொன்னாள்.

மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது மாடு மேய்க்கும் பெரியவனின் தொண்டைக் குழியில் வெண்ணை அப்படியே இருந்தது.

படிக்கும் சின்னவனின் தொண்டைக் குழியில் வெண்ணை உருகி விட்டிருந்தது.

பாட்டி சொன்னாள் 'படிப்பவனுக்கு எந்த நேரமும் அதே சிந்தனை,கவலை ,பயம்.அதனால் உடல் சூடாகி வெண்ணை உருகி விட்டது.

ஆனால் மாடு வீட்டுக்கு வந்த பிறகு மறு நாள் வரை பெரியவன் கவலைப் படுவதில்லை.
எனவே அவன் உடல் குளிர்ச்சியாக இருக்கிறது.எனவேதான் வெண்ணை உருகவில்லை.

அம்மா புரிந்து கொண்டு படிக்கும் சின்ன மகனுக்கும் நல்ல உணவு,பால்,பழம் எல்லாம் தரத் தொடங்கினாள்.

குட்டீஸ் படிப்பதாலும், விளையாடுவதாலும் வீணாகும் சக்திக்கு ஈடு செய்ய நீங்கள் நல்ல சத்துள்ள உணவைச் சாப்பிடப் பழகனும்.காய்கறிகள்,கீரைவகைகள்,பழங்கள் பால் எல்லாம் சாப்பிடனும்.


சில குட்டீஸ் காய்கறிகளே சாப்பிட மாட்டாங்க.

சிலபேர் பால் வாசனை பிடிக்காதுன்னு நோ சொல்லிடுவாங்க.

சில குட்டீஸ் சாப்பாடு சாப்பிடாம ஒன்லி 'நொறுக்ஸ்' [ஸ்நேக்ஸ்] மட்டும் சாப்பிடுவாங்க.

வெறும் ஸ்நேக்ஸ்,சாக்லெட்ஸ்,பிஸ்கட்ஸ் மட்டும் சாப்பிடுதலும் பெப்ஸீ,கோக் மட்டுமே அடிக்கடி குட்ப்பதும் தப்பு.

ஆண்ட்டியின் இந்தப் பதிவையும் படிங்க புரியும்.

ஓகே பை குட்டீஸ்.

அன்புடன் கண்மணி ஆண்ட்டி.

Monday, July 2, 2007

பீர்பால் கதைகள்-பண்டிட்ஜி சேவாராம்

ஒரு தடவை பீர்பால் கிட்ட சேவாராம் அப்படீங்கரவர் வந்து '' என்னோட அப்பா, தாத்தா இன்னும் அவங்க தாத்தா எல்லாம் பெரிய சமஸ்கிருத பண்டிட்...அவர்ங்களை எல்லாம் அவங்க காலத்துல மக்கள் 'பண்டிட்ஜி' ன்னு கூப்பிடுவாங்க. இப்ப என் கிட்ட எந்த காசோ, பணமோ இல்லை. அது எனக்கு வேண்டாம், ஆனா அவங்களை எல்லாம் கூப்பிட்ட மாதிரி என்னையும் மக்கள் பண்டிட்ஜி னு மக்கள் கூப்பிடனும். அதுக்கு ஒரு வழி சொல்லுங்கன்னு சொன்னாராம்''.

அதுக்கு பீர்பால் சரி அப்ப நான் சொல்றபடி செய்யுங்க. எல்லாரும் உங்களை பண்டிட்ஜீன்னு கூப்பிடுவாங்கன்னு சொன்னாராம். உங்களுக்கு பண்டிட்ஜின்னு கூப்டா பிடிக்காது ன்னு எல்லார்க்கும் தெரியற மாதிரி பண்ணீருங்க அப்புறம் பாருங்கன்னு சொன்னாராம்.

அப்புறம் பீர்பாலும் சேவாராம் இருந்த தெருவுல இருக்குற குழந்தைகள் கிட்ட சேவாராம்க்கு பண்டிட்ஜின்னு கூப்டா பிடிக்காது, அதனால யாரும் அவரை கூப்டாதீங்கன்னு சொன்னாராம். ஆனா குழந்தைகள் அதுக்கு அப்புறம் சேவாராம பண்டிட்ஜீன்னே கூப்பிட..சேவாராமும் அவருக்கு அப்பிடி கூப்ட்டா பிடிக்காத மாதிரி திட்ட ஆரம்பிச்சாராம். அதுக்கு அப்புறம் அந்த ஊர்ல இருந்தவங்க எல்லாரும் அவரை அப்படியே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.

அவங்க கூப்பிட்டது சேவாராமுக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் irritate பண்றதுக்காக. சேவாராமுக்கு எப்படியோ அவரை பண்டிட்ஜினு கூப்ட்டா போதும்னு.

Sunday, July 1, 2007

ஆடு...புலி...புல்லுக்கட்டு...

புதிர்:1

ஒரு ஆடு ,புலி,புல்லுக்கட்டு மூன்றும் ஆற்றின் ஒருகரையில் இருக்க மூன்றையும் ஆற்றைக் கடந்து ஒருவன் எடுத்து வர வேண்டும்.

அதுவும் ஒவ்வொன்றாகத்தான் எடுத்து வரனும்.

புலியை முதலில் எடுத்துச் சென்றால் ஆடு புல்லைத் தின்றுவிடும்.

புல்லுக் கட்டை முதலில் எடுத்துப் போனால் புலி ஆட்டைக் கொன்று விடும்.

இப்படி நடக்காமல் மூன்றையும் பத்திரமாய்க் கரை சேர்க்கனும்னா

எப்படிக் கொண்டு போவது?

புதிர்:2

ஒரு ஆற்றின் இரு கரையிலும் ஒரு பக்கம் மூன்று பேய்கள்.மறு பக்கம் மூன்று மனிதர்கள்.

இரண்டு செட்டையும் அப்படியே ஒரு கரையிலிருப்பதை மறு கரைக்கு இடம் மாற்றனும்.

ஒரே ஒரு படகு இருக்கு.ஒரு படகில் ஒரு நேரத்தில் இருவரை மட்டுமே அழைத்துப் போக முடியும்.

ஒரு கரையில் விட்டுத் திரும்பும் போது பேய்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் ஆபத்து.

அதாவது பேய்கள் இரண்டாகவும் மனிதன் ஒன்றாகவும்[விட்டால்] இருந்தால் பேய்கள் மனிதனைக் கொன்றுவிடும்.

இதைக் கவனத்தில் கொண்டு எப்படி இடம் மாற்றுவீர்கள்?

யோசிச்சி வைங்க குட்டீஸ்

எப்படியும் சிபி முதல்ல அட்டெண்டன்ஸ் குடுத்துடுவார்.
ஓகே ஜூட்

குட்டீஸ்..தமிழ் படிக்கலாமா




ஹை குட்டீஸ்....

கண்மணி அக்கா என்னையும் சேர்த்துட்டாங்க
இந்த
பிளாக்குல ...தேங்ஸ்
அக்கா...

வெளியூர்ல இருக்குற குட்டீஸ்க்கு எல்லாம் ஸ்கூல தமிழ் படிக்க முடியாது இல்ல..


அவங்க எல்லாம் இதோ கீழ இருக்குற சைட் களுக்கு போய் டைம் கிடைக்கும் போது படிச்சுக்கலாம்...எல்லாமே குட்டீஸ்க்கு பிடிச்ச மாதிரி.


தமிழ் படிக்கலாமான்னு போட்டு இருக்கிறதுனால நான் சொல்லி குடுக்கப் போறேன்னு பயந்துக்க வேண்டாம்....
இன்டரெஸ்டிங்கா இருக்கும்....





இன்னும் இருக்கு...அதுவும் இன்னொரு நாளைக்கு தர்ரேன்...

அக்காஸ் & அண்ணாஸ்..

நீங்களும் படிக்கலாம்....:-))..

ஆனா உங்களுக்கு எல்லாம் டெஸ்ட் வைப்பேன்..குட்டீஸ்க்கு எல்லாம் டெஸ்ட் இல்லை
netoops blog